சாத்தனூர் அணையில் விழுந்து சென்னை மாணவன் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு சுற்றுலா சென்ற சென்னை மாணவன் அங்குள்ளஅணையில் விழுந்து பலியானான்.
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாவது வகுப்பு படித்து வந்த மாணவன்வெங்கடேஷ். இவனது பள்ளியிலிருந்து சுமார் 150 பேர் சாத்தனூர் அணைக்கு சுற்றுலாசென்றிருந்தனர்.
அணையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று வெங்கடேஷ் தடுமாறி அணைக்குள்விழுந்து விட்டான். இதில் அந்த இடத்திலேயே அவன் உயிரிழந்தான்.
உடனடியாக அவனது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு, ராயப்பேட்டை அரசுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள்ளது.
தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். வெங்கடேஷின்பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications