தர்மபுரியில் பெண் நக்சலைட் கைது

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட நக்லைட்டின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரும்நக்லைட் தான் என போலீசார் கூறுகின்றனர்.

ஏற்கனவே 27 நக்சலைட்டுகள் பிடிபட்ட ஊத்தங்கரை பகுதிக்கு அருகில் தான் இவரும் பிடிபட்டுள்ளார். சிலமாதங்களுக்கு முன் அடர்ந்த காட்டுப் பகுதியை ஒட்டிய இந்த ஊரின் மாந்தோப்புகளில் பயிற்சி முகாம்நடத்தியபோது பெருமளவிலான நக்சல்களை பொது மக்களும் போலீசாரும் சேர்ந்து பிடித்தனர்.

இதில் பலரும் தப்பி காட்டுக்குள் ஓடிவிட்டனர். ஆனாலும், இப் பகுதியில் ரகசிய போலீஸ் கண்காணிப்புதொடர்ந்து கொண்டுள்ளது.

இந் நிலையில் ஊத்தங்கரைக்கு அருகில் உள்ள இண்டூரை ஒட்டிய சிறிய கிராமமான ஈரப்பயனிலியில் பெண்நக்சலைட்டை போலீசார் சுற்றி வளைத்தனர்.

இவரது பெயர் யசோதா (வயது 25). இவரது கணவர் காளிதாசன் ஏற்கனவே நக்சல் இயக்கத்தில் இருந்ததாகக்கைது செய்யப்பட்டுள்ளார். ஊத்தங்கரையில் நக்சலைட்டுகளுக்கான பயிற்சி முகாமை ஏற்பாடு செய்ததில்யசோதாவுக்கும் தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார்கூறுகின்றனர்.

அவரை க்யூ பிராஞ்ச் போலீசார் திடீரென வீட்டில் நுழைந்து கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+