திருச்சி அருகே கார்-லாரி பயங்கர மோதல்: காங்கிரஸ் பிரமுகர் உள்பட 2 பேர் பலி
திருச்சி:
திருச்சி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி, தீப்பிடித்துக் கொண்ட விபத்தில்திருக்கோவிலூரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், கார் டிரைவரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
திருக்கோவிலூர் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் கவுன்சிலருமான ஸ்ரீதர் உள்ளிட்ட தொண்டர்கள்சாத்தான்குளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு டாடா சுமோ காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
திருச்சியை அடுத்து உள்ள திருக்கோவிலூர் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே சிமெண்ட்ஏற்றி வந்த லாரி ஒன்று காருடன் பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்திலேயேலாரியும், காரும் தீப்பிடித்துக் கொண்டன.
இவ்விபத்தில் ஸ்ரீதரும், அந்தக் காரின் டிரைவரும் உடல் நசுங்கியும், தீயிலிருந்து வெளிவரமுடியாமல் சிக்கியும் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஐந்து பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருக்கோவிலூர் போலீசார் இவ்விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications