கோவை அருகே வீடுகள் குலுங்கின: சுவர்களில் விரிசல்- மக்கள் பீதி
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதியில் உள்ள 2 வீடுகள் திடீரென்று குலுங்க ஆரம்பித்ததால்அங்கிருந்தவர்கள் பீதியடைந்தனர். ஆனால் இந்தக் குலுக்கல் நில அதிர்வு காரணமாக ஏற்பட்டதாஎன்பது குறித்து தெரியவில்லை.
கோயம்புத்தூரை அடுத்த வெள்ளாலூர் பகுதியில் இன்று அதிகாலை இரண்டு வீடுகள் திடீரென்றுகுலுங்கத் தொடங்கின.
இதையடுத்து களிமண்ணால் கட்டப்பட்டிருந்த அந்த வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தவர்கள்பதறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். ஒரு சில வினாடிகளே நீடித்த இந்தக்குலுக்கல் நின்றதைத் தொடர்ந்து அவர்கள் திரும்பவும் வீட்டுக்குள் சென்றனர்.
இந்நிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது, இரண்டு வீடுகளின் சுவர்களிலும் ஏராளமானவிரிசல்களை ஏற்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் பதறிப் போயினர்.
அப்பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால்தான் அந்த இரண்டு வீடுகளும் குலுங்கியதாகக்கூறப்படுகிறது. ஆனால் கோயம்புத்தூரில் உள்ள வானிலை ஆய்வு நிலையத்தில் நிலநடுக்கத்தைஅளக்கும் கருவி இல்லாததால் இது உறுதி செய்யப்படவில்லை.
வீடு குலுங்கியபோது அதன் கதவை யாரோ பிடித்து உலுக்குவதைப் போல இருந்தது என்று அந்தவீடுகளில் உள்ளவர்கள் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
-->












Click it and Unblock the Notifications