சாத்தான்குளத்தில் வெடிகுண்டுகள்?- போலீசார் விடிய விடிய சோதனை
திருநெல்வேலி:
சாத்தான்குளத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில், அங்கு பலஇடங்களில் வெடிகுண்டுகள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்துஅங்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை மறுநாள் சாத்தான்குளத்தில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலின்போது சிலர்வன்முறையைக் கட்டவிழ்க்கத் திட்டமிட்டுள்ளதாகப் போலீசாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏற்கனவே சாத்தான்குளத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெளியூர்களைச் சேர்ந்த ரவுடிகள்குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையேஅடிக்கடி மோதல்களும் வெடித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாத்தான்குளத்தில் ஏராளமான பயங்கர ஆயுதங்களும்,வெடிகுண்டுகளும் வாகனங்கள் மூலம் கடத்தி வரப்பட்டு குவிந்து கொண்டிருப்பதாகத் தற்போதுபோலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சாத்தான்குளத்தை நோக்கி வரும் வாகனங்களிலும், அங்கிருந்து செல்லும்வாகனங்களிலும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு முழுவதும்விடிய விடிய அவர்கள் வாகன சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் சாத்தான்குளத்திலும் சந்தேகப்படும் இடங்களில் எல்லாம் வெடிகுண்டுகள், ஆயுதங்கள்உள்ளனவா என்றும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications