ஏ.டி.எம். கார்டு மூலம் திருட்டு: மேலும் 2 பேர் கைது
சென்னை:
சென்னையில் ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பவர்களைக் குறிவைத்து பணம்பறித்து வந்த மேலும் 2 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு வெங்கடாத்ரி என்ற தொழிலதிபர் தனது காரில் சென்னை-வடபழனியில்வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்தது.
பின்னர் அவரைத் தாக்கி பணம், நகைகளைப் பறித்துக் கொண்ட அந்தக் கும்பல் அவருடன் காரில்ஏறிக் கொண்டு ஏ.டி.எம். மையத்தில் காரை நிறுத்தி பணத்தை எடுத்து வருமாறு மிரட்டியது.
அதன்படி அவர் எடுத்துக் கொண்டு வந்த ரூ.11,000 பணத்தை அந்தக் கும்பல் பறித்துக் கொண்டுதப்பி ஓடிவிட்டது.
சென்னையில் இதுபோன்ற பல சம்பவங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்புஏற்பட்டது. இதையடுத்து இந்தக் கும்பலைப் பிடிக்க தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையில் கடந்த வாரம் நிஜாமுதீன் என்பவன் பிடிபட்டான்.அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் தற்போது இளங்கோ மற்றும் குமார் ஆகிய இருவரையும்போலீசார் கைது செய்துள்ளனர்.
மற்றொரு முக்கியக் குற்றவாளியான கண்ணன் என்பவனைப் போலீசார் தொடர்ந்து தேடிவருகின்றனர். விரைவில் அவனும் பிடிபடுவான் என்று சென்னை போலீசார் கூறியுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications