சென்னைக்கு செம்பரம்பாக்கம் ஏரி குடிநீர்: விவசாயிகள் எதிர்ப்பு
சென்னை:
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியை நம்பியுள்ள பாசன விவசாயிகள்போதிய நீர் திறந்துவிடக் கோரி சென்னையில் போராட்டம் நடத்தினர்.
சென்னை அருகே உள்ளது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில்இதுவும் ஒன்று. ஆனால் செம்பரம்பாக்கம் ஏரியை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் பாசனநிலங்களும் உள்ளன.
இருந்தாலும் இந்த ஏரியிலிருந்து விவசாய நிலங்களுக்குப் போதிய தண்ணீரை விடுவிக்கபொதுப்பணித் துறை அதிகாரிகள் மறுப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் குன்றத்தூர் உள்ளிட்ட 64 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள்சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்திற்குவந்தனர்.
தங்களது பாசன நிலங்களுக்கு உடனடியாக நீர் திறந்து விடக் கோரி அவர்கள் முற்றுகைப்போராட்டம் நடத்தினர். உயர் அதிகாரிகள் விரைந்து வந்து விவசாயிகளைச் சமாதானப்படுத்தினர்.
சென்னை நகர குடிநீருக்குப் போக மீதமுள்ள நீரைத்தான் விவசாய நிலங்களுக்கு வழங்க முடியும்என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுவதாகக் குற்றம் சாட்டும் விவசாயிகள், எங்களுக்குப்போகத்தான் சென்னை நகருக்கு குடிநீர் எடுக்க முடியும் என்று வாதிடுகிறார்கள்.
தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் தங்ககளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும்விவசாயிகள் கூறுகிறார்கள்.
உடனடியாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்து விடா விட்டால்விவசாயிகளைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications