27ம் தேதி விழுப்புரம் செல்கிறார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்வர் ஜெயலலிதாவரும் 27ம் தேதி விழுப்புரம் செல்கிறார்.
சமீப காலமாக பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று நலத் திட்ட உதவிகளைஜெயலலிதா தொடங்கி வைத்து வருகிறார்.
அதன்படி நாளை மறுநாள் (27ம் தேதி) விழுப்புரம் செல்லும் ஜெயலலிதா, அங்கு ரூ.236 கோடிமதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களைத் திறந்து வைக்கிறார்.
இது தவிர பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார். பின்னர் அரசின்நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் ஜெயலலிதா.
வழக்கம் போல் சபாநாயகர் காளிமுத்து தலைமையில் இந்நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. அமைச்சர்கள்,மாவட்ட எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications