ஜெ. ராஜினாமா செய்ய கருணாநிதி கோரிக்கை
சென்னை:
தேர்தல் ஆணையம் கடுமையானக் கண்டனம் தெரிவித்த பிறகும் முதல்வர் பதவியில் நீடிக்கத் தான் வேண்டுமாஎன்பதை ஜெயலலிதா யோசித்துப் பார்க்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சாத்தான்குளத்தில் சிமென்ட் ஆலை கட்டித் தருகிறேன்,மகளிர் கல்லூரி கட்டித் தருகிறேன் என்று தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி முதல்வர் ஜெயலலிதாவாக்குறுதிகளை அள்ளி வீசினார்.
அதற்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நடந்ததை மறைத்து, தான் வகிக்கும் உயர் பதவிக்கு மரியாதை தராமல் தலைமைச் செயலாளர் மூலம் தேர்தல்ஆணையத்திற்குக் கடிதம் எழுதினார்கள்.
அதையும் தேர்தல் ஆணையம், தாமதமாக இருந்தாலும் கூட, கண்டித்துள்ளது. இதற்குப் பிறகும் முதல்வர்பதவியில் தொங்கிக் கொண்டிருப்பது சரியா என்பது குறித்து ஜெயலலிதா யோசித்துப் பார்க்க வேண்டும்.
அது தான் ஜனநாயகத்திற்கு நல்லது என்றார் கருணாநிதி.
நாடாளுமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் வீர சாவர்க்கரின் படத்தைத் திறப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறித்து கேட்டபோது, இறந்துபோன ஒருவரைப் பற்றி பேச விரும்பவில்லை என்று பதில் தந்தார்.
நல்லகண்ணுவும் கோரிக்கை:
இதற்கிடையே ஜெயலலிதா ராஜினாமா செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணுவும்கோரியுள்ளார்.
இந்திய அரசியல் வரலாற்றில் இதுபோல் ஒரு முதல்வரை நேரடியாக தேர்தல் கமிஷன் கண்டித்தது இல்லை. அந்த அளவுக்கு அதிகாரதுஷ்பிரோயாகம் செய்த ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications