ரயில்வே பட்ஜெட்: சேலம்-பெங்களூர், சென்னை-ஈரோடு, கோவா, சண்டீகருக்கு புதிய ரயில்கள்
டெல்லி:
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு பல புதிய ரயில்களும் ரயில் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதாவது:
பெங்களூர், கோவா, சண்டீகருக்கு புதிய ரயில்கள்:
சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு திருச்சி வழியாக புதிய தினசரி ரயில் அறிமுகப்படுத்தப்படும்.
அதே போல சேலம்- பெங்களூர் இடையே ஒரு தினசரி ரயிலும் விடப்படும்.
சென்னையில் இருந்து டேராடூன் வரை புதிய ரயில் அறிமுகப்படுத்தப்படும். இந்த வாரந்திர ரயில் சண்டீகர், டெல்லி, சகாரன்பூர் வழியேசெல்லும்.
சென்னை- பெங்களூர் இடையே மேலும் ஒரு வாரந்திர புதிய ரயிலும் இயக்கப்படும்.
கோவா தலைநகர் வாஸ்கோவில் இருந்து சென்னைக்கு புதிய வாரந்திர ரயில் அறிமுகப்படுத்தப்படும். இது மட்காவ் வழியே செல்லும்.
பாண்டிச்சேரி வரை நீட்டிப்பு:
சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரை செல்லும் பாஸஞ்சர் ரயில் விரைவில் பாண்டிச்சேரி வரை நீட்டிக்கப்படும். அகல ரயில்பாதை அமைக்கப்பட்ட பின் இது அமலாக்கப்படும்.
சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான புதிய ரயில் பாதைப் பணி அடுத்தாண்டுக்குள் முடிவடையும்.
சென்ட்ரல்- எழும்பூர் இணைப்பு:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் எழும்பூர் ரயில் நிலையத்தையும் இணைக்கும் பணிகள விரைவில் தொடங்கும்.
திருமயிலையில் இருந்து வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் திட்டப் பணிகள் வரும் ஜூன் மாதத்துக்குள் முடிவடையும்.
அகல ரயில் பாதையாக மாற்றம்:
விழுப்புரம்- பாண்டிச்சேரி இடையிலான மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக்கப்பட்டு வருகிறது.
இதைத் தவிர ராஜபாளையம்- கொல்லம், விருதுநகர்- தென்காசி, வடலூர்- கூடலூர், தஞ்சாவூர்- கும்பகோணம்- விழுப்புரம்ஆகியவற்றுக்கு இடையிலான மீட்டர் கேஜ் பாதைகளும் அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கப்படும்.
இரட்டை தண்டவாளம்:
அம்பாத்துரையில் இருந்து கொடைக்கானல் வரை இன்னொரு தண்டவாளம் அமைக்கப்படும். அதே போல சென்னை கடற்கரையில்இருந்து கொருக்குப்பேட்டை வரை மேலும் ஒரு தண்டவாளம் அமைக்கப்படும் என்றார் நிதிஷ்குமார்.
தமிழகத்துக்கு ஒரே நேரத்தில் இவ்வளவு திட்டங்கள் தரப்பட்டதேயில்லை. தொடர்ந்து ஒதுக்கப்பட்டே வந்தது.
எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும் மக்கள் பிரச்சனையை உணர்ந்து செயல்பட்டு வரும் பா.ம.கவைச் சேர்ந்த மத்திய ரயில்வேதுறைஇணையமைச்சர் ஏ.கே. மூர்த்தியின் முயற்சிகளால் தான் இவ்வளவு திட்டங்கள் கிடைத்துள்ளன.
இதற்காக அவரையும் பாராட்டலாம். அவரது சிபாரிகளை ஏற்ற நிதிஷ்குமாரையும் பாராட்டலாம்.
-->












Click it and Unblock the Notifications