சாத்தான்குளத்தில் 65 சதவீத வாக்கு பதிவு

Subscribe to Oneindia Tamil

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் நாளை மறுநாள் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

சாத்தான்குளம் தொகுதியில் நேற்று நடந்த இடைத் தேர்தலில் பெரிய அளவிலான அசம்பாவிதசம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

மொத்தமுள்ள 1,55,059 வாக்காளர்களில் சுமார் 65 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக தமிழகதலைமைத் தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி கூறியுள்ளார். 47,741 ஆண்களும், 52,809பெண்களும் வாக்களித்துள்ளனர்.

அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணத்துக்கும் காங்கிரஸ் வேட்பாளரும் வழக்கறிஞருமானமகேந்திரனுக்கும் இடையில் தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. இவர்களைத் தவிர 23சுயேச்சைகளும் இத்தொகுதியில் போட்டியிட்டனர்.

நேற்று மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்தவுடன் மின்னணு எந்திரங்கள் அனைத்தும்சீலிடப்பட்டு, தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்குக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த வளாகத்தைச்சுற்றிலும் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாளை மறுநாள் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மொத்தம் 10மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். 50 அதிகாரிகள் வாக்குகளை எண்ணுவார்கள்.18 சுற்றுக்களாக இந்த வாக்குகள் எண்ணப்படும்.

மின் வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், காலை 11 மணிக்கே இத்தொகுதிஎம்.எல்.ஏ. யாரென்பது தெரிந்து விடும்.

வாக்கு எண்ணிக்கையையொட்டி சாத்தான்குளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள்முழுவதும் மதுக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மாநில தேர்தல் கமிஷன்உத்தரவிட்டுள்ளது.

மேலும் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி சாத்தான்குளம் முழுவதும்போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+