ரூ.10 லட்சம் பணத்தை "அபேஸ்" செய்த போலி போலீசார்
சென்னை:
சென்னையில் போலீசார் போல நடித்து ரூ.10 லட்சம் பணம் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸை சிலர்திருடிச் சென்றனர்.
திருச்சியைச் சேர்ந்தவர் கமாருதீன். இவருக்கு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள திப்பு சாகிப்தெருவில் தங்கும் விடுதி (மேன்சன்) உள்ளது. அப்பகுதியில் உள்ள வாலாஜா சாலையிலும் ஒருநிலத்தை வாங்க திட்டமிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து தன் மைத்துனர் முகம்மது அலியிடம் ரூ.10 லட்சம் பணத்தைக் கொடுத்துதிருச்சியிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தார். பணத்துடன் சென்னை வந்த முகம்மது அலி,நிலம் வாங்குவது தொடர்பாக தாமதம் ஏற்பட்டதால் பணத்துடன் திருச்சி திரும்ப முடிவு செய்தார்.
இதையடுத்து அவரும் மேன்சன் மேலாளர் அசோகனும் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.அப்போது அங்கு நான்கு "போலீசார்" வந்தனர். நீங்கள் யார், எங்கே போகிறீர்கள் என்று முகம்மதுஅலியிடம் விசாரித்த அவர்கள், உங்களை இன்ஸ்பெக்டர் கூப்பிடுகிறார், வாருங்கள் என்றுஅழைத்துச் சென்றனர்.
மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள நடேசன் தெருவில் வந்தபோது, திடீரென்று அந்த"போலீசார்" முகம்மது அலியின் கையில் இருந்த பணம் அடங்கிய சூட்கேஸை அபகரித்துக் கொண்டுஅங்கிருந்த காரில் ஏறித் தப்பி விட்டனர்.
அப்போதுதான் அவர்கள் போலீசார் வேடத்தில் வந்த திருடர்கள் என்று தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து மாம்பலம் காவல் நிலையத்தில் முகம்மது அலி புகார் கொடுத்தார். போலிபோலீசாரை மாம்பலம் போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications