For Quick Alerts
For Daily Alerts
Just In
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு வீரமணி கண்டனம்
சென்னை:
அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கு மாறாக தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள்செயல்படுவதற்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அண்ணா பல்கலைக் கழக செயல்பாடுகளிலிருந்து விலகி நிற்க தனியார் பொறியியல் கல்லூரிகள்முடிவு செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது மாணவர்களின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் செயல்.
அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மதிக்க மாட்டோம் என்ற வகையில் தனியார் பொறியியல்கல்லூரிகள் செயல்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
இட ஒதுக்கீட்டுக் கொள்கை தனியார் பொறியியல் கல்லூரிகளில் முறையாகசெயல்படுத்தப்படுகின்றனவா என்பதை குழு அமைத்து அரசு கண்காணிக்க வேண்டும் என்றார்.
-->
Comments
Story first published: Friday, February 28, 2003, 5:30 [IST]