For Daily Alerts
Just In
தமிழகத்தில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்
சென்னை:
மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் சிறப்புபூஜைகள் நடைபெற்றன.
சிவராத்திரியையொட்டி ஏராளமான மக்கள் நேற்று இரவு கோவில்களில் குழுமி இருந்தனர்.
கோவில்களில் சிறப்பு பூஜைகள், தேர்த் திருவிழாக்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.
சென்னை-திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி திருக்கோவில், மயிலாப்பூரில் உள்ளகபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் மகா சிவராத்திரிக்கான சிறப்பு பூஜைகள்நடைபெற்றன.
ராமேஸ்வரத்தில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மகா சிவராத்திரியையொட்டிராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி அவர்கள் மகிழ்ந்தனர். ராமநாதசுவாமி கோவிலில்சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
-->
Story first published: Sunday, March 2, 2003, 5:30 [IST]