3 மாதங்கள் நடக்கவுள்ள தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர்
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்கி மே 15ம் தேதி வரை நடைபெறும்என்று சபாநாய காளிமுத்து தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாத இறுதியில்தொடங்குகிறது. மே 15ம் தேதி வரை கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு கூட்டத் தொடர் நீடிக்கும்.
திமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதி மீதான நடவடிக்கையில் எந்தத் தவறும் இல்லை, விதி மீறலும் இல்லை, மரபுமீறலும் இல்லை.
கடந்த திமுக ஆட்சியில் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சபாநாயகராக இருந்தபோது தாமரைக்கனி மீதுதன்னிச்சையாகவே நடவடிக்கை எடுத்தார்.
அதற்கு உயர் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. சபாநாயகர் தன்னிச்சையாக நடந்து கொண்டதாக கண்டனம்தெரிவித்தது. எனவேதான் பரிதி விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் தான்நடவடிக்கை எடுத்தோம்.
மேலும் பரிதி மீது சட்டமன்றம் முறைப்படி காவல்துறையிடம் வழக்குப் பதிவு செய்தது. இப்போது இந்த விவகாரம்நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வறட்சி போன்ற இயற்கை சீற்றம் தாக்கும்போது அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்க் கட்சிகளும் ஒத்துழைப்புத்தர வேண்டும் என்றார்.
-->












Click it and Unblock the Notifications