கிரிக்கெட்டால் வருமானம் இழந்த "பல்லவன்"
சென்னை:
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கடந்த சனிக்கிழமை நடந்த கிரிக்கெட் போட்டி காரணமாக சென்னைமாநகர போக்குவரத்துக் கழகம் (முன்னாள் பல்லவன் போக்குவரத்துக் கழகம்) பெரும் வருவாய்இழப்பைச்சந்தித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா மோதும் ஒவ்வொரு போட்டியின் போதும் பிற்பகலுக்கு மேல் பஸ்களில்கூட்டம் குறைந்து விடுவதாகவும் இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும்தெரிகிறது.
இந்தியா, பாகிஸ்தான் போட்டியின்போது ஒரே நாளில் மட்டும் ரூ.5 லட்சம் வசூல் குறைந்தது. அன்றைய தினம்வழக்கமாக வசூலாகும் ரூ.92லட்சம் என்பது ரூ.88 லட்சமாக குறைந்துவிட்டது.
இதே நிலைமை தான் கடைகளுக்கும் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டி நடக்கும்போது வியாபாரம் டல்அடித்துவிடுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் சிக்ஸ் பிரிவில் இந்தியா நுழைந்துள்ளதால் மேலும் வருவாய்இழப்பை பல்லவன் சந்திக்க வேண்டியிருக்கும். கடைகளுக்கும் இதே நிலை தான்.
-->