ராவல்பிண்டியில் பின் லேடன் பதுங்கியுள்ளானா?
இஸ்லாமாபாத்:
ஒசாமா பின் லேடன் தன் கைப்பட எழுதிய சில கடிதங்கள் ராவல்பிண்டியில் பிடிபட்டுள்ளன. இதனால் இதே பகுதியில் எங்கோ தான் பின்லேடன் மறைந்திருக்க வேண்டும் என அமெரிக்கா கருதுகிறது.
சமீபத்தில் ராணுவ அதிகாரிகளின் வீடுகள் நிறைந்த ராவல்பிண்டியில் வைத்து பின் லேடனின் ராணுவ ஆலோசகர் காலித் சேக் முகம்மத்என்பவர் பிடிபட்டார். இவரை ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது முகாமுக்கு அமெரிக்கா கொண்டு சென்றுள்ளது.
இவரிடம் விசாரித்தால் பின் லேடன் இருக்குமிடம் தெரியும் என அமெரிக்கா கருதுகிறது. இந் நிலையில் இவர் கொடுத்த தகவலின்அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே காலித் மற்றும் அவரது நண்பர்களின் வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில் பின் லேடன் சமீபத்தில் எழுதியதாகக்கருதப்படும் சில கடிதங்களும் சிக்கியுள்ளன. இதனால் இவர் தொடர்ந்து பின் லேடனுடன் தொடர்பு வைத்திருந்ததும் உறுதியாகியுள்ளது.
இதே பகுதியில் எங்காவது தான் பின் லேடனும் மறைந்திருக்க வேண்டும் என பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.
-->