காப்பியடுத்து பிடிபட்ட பிளஸ்டூ மாணவர்கள்: சூப்பர்வைசர்கள் மீதும் நடவடிக்கை?
சேலம்:
சேலம் நகரில் பிளஸ்டூ தேர்வில் காப்பி அடித்த 5 மாணவர்களை பறக்கும் படையினர் பிடித்து வெளியேற்றினர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜே.ராதாகிருஷ்ணன் காவல் துறைக் கண்காணிப்பாளர் மாகாலி தலைமைக் கல்விஅதிகாரி கார்மேகம், வருவாய் அதிகாரி ராஜேஷ் ஆகியோர் அடங்கிய பறக்கும் படை மாவட்டம் முழுவதும்ஆங்காங்கே பல்வேறு தேர்வு மையங்களில் திடீர் சோதனைகள் நடத்தினர்.
அவர்களிடம் சேலம் நகரில் மட்டும் 4 மாணவர்கள் சிக்கினர். ஆட்டையம்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில்சோதான நடத்தியபோது பிட் அடித்துக் கொண்டிருந்த ஒரு மாணவர் பிடிபட்டார்.
இந்த 5 பேரையும் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றிய அதிகாரிகள் இவர்களை 5 ஆண்டுகளுக்குத் தேர்வுஎழுதவும் தடை விதிக்க கல்வித்துறைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
இந் நிலையில் தேர்வு மையங்களில் மாணவர்கள் பிட் அடிப்பது, காப்பி அடிப்பது போன்ற செயல்களில்ஈடுபட்டால் அந்த மையத்தின் சூப்பர்வைசர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தேர்வுத்துறைஎச்சரித்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications