பொன்முடிக்கு ஜாமீன் கிடைத்தது
விழுப்புரம்:
முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு விழுப்புரம் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளது.
சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் வருகையை ஒட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும்அதிமுக கொடிகள் கட்டப்பட்டன. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய பொன்முடியும், திமுகவினரும்கலாட்டாவில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் கலாட்டாவில் இறங்கினர்.
கைது செய்யப்பட்ட பொன்முடியும், 15 திமுகவினரும் ஜாமீன் கோரி விழுப்புரம்முதலாவது நீதித்துறை நடுவர்மன்றத்தில் மனு செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி சின்னச்சாமி அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
இதன்படி பொன்முடி தினமும் சென்னை சைதாப்பேட்டை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் மாலை 5 மணிக்குஆஜராகி கையெழுத்திட வேண்டும். மற்றவர்கள் விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் காலை10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்முடியும், திமுகவினரில் 15 பேரும் இன்றுவிடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications