For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக காவல்துறையில் பெரும் மாற்றம்: எஸ்.பிக்கள் கூண்டோடு டிரான்ஸ்பர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திலகவதி ஐ.பி.எஸ். தவிர தமிழக காவல்துறையில் பல மூத்த அதிகாரிகளும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த அதிகாரி என பெயர் எடுத்துள்ள ஈரோடு மாவட்ட எஸ்.பி. சைலேஷ்குமார் யாதவ், திருட்டு வி.சி.டி.ஒழிப்புக்கான எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இரண்டு கூடுதல் டிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சேலம், ஈரோடுஉள்ளிட்ட பல மாவட்ட எஸ்.பிக்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை திருச்சி அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமைக் கண்காணிப்பு அதிகாரியாக இருந்து வந்த கூடுதல்டி.ஜி.பி. குமாரசாமி அதேபொறுப்பில் டி.ஜி.பியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

அதே போல தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத் தலைவர் பதவியில் உள்ள கூடுதல் டி.ஜி.பி. கோவிந்த் அதேபொறுப்பில் டி.ஜி.பியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

தஞ்சை எஸ்.பியாக இருந்த கந்தசாமி மாற்றப்பட்டு மதுரை சரக டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரைபோலீஸ் கமிஷனராக இருந்த சூரிய பிரசாத் சென்னை தொழில் நுட்பப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

செங்கை கிழக்கு மாவட்ட எஸ்.பியாக இருந்து வந்த பொன் மாணிக்கவேல் சேலம் மாவட்ட எஸ்.பியாகமாற்றப்பட்டுள்ளார். அதிரடி அதிகாரியான இவர் ரவுடிகளை ஒழித்துக் கட்டுவதில் பெயர் பெற்றவர். சேலத்தில்ரெளடிகள் அட்டகாசம் பெருகியுள்ளதால் அங்கு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பொருட்டு அங்குமாற்றப்படுவதாகத் தெரிகிறது.

லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பியாக இருந்த செளந்தரராஜன் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

நெய்வேலி லிக்னைட் நிறுவன கூடுதல் எஸ்.பியாக இருந்த பி.ராஜேந்திரன் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.

புதுக்கோட்டை கிரைம் பிராஞ்ச் எஸ்.பி. ஆர். கதிரேசன் மதுரை கிரைம் மற்றும் போக்குவரத்துக் காவல்துறையின்துணை கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மதுவிலக்கு கூடுதல் எஸ்.பி. சென்னை மதுவிலக்கு எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இந்து அறநிலையத்துறை எஸ்.பி. ரவீந்திரன் சென்னை அரசுப் போக்குவரத்துக் கழக விஜிலென்ஸ் அதிகாரியாகநியமிக்கப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் சட்டம் ஒழுங்கு துணை கமிஷ்னர் பி.பாலசுப்பிரமணியம் ஈரோடு எஸ்.பியாகநியமிக்கப்பட்டுள்ளார்.

திருட்டு வி.சி.டி. ஒழிப்பு எஸ்.பியாக இருந்த சுந்தரமூர்த்தி நாகப்பட்டிணம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. பாரி நீலகரி மாவட்ட எஸ்.பியாகிறார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X