கைதிகளுக்கு படிப்புக் கட்டணம் ரத்து: சென்னை பல்கலை. முடிவு
சென்னை:
சென்னைப் பல்கலைக்கழகம் மூலம் அஞ்சல் வழியில் இளநிலை அல்லது முதுநலைப் பட்டப் படிப்புபடிக்க விரும்பும் கைதிகளுக்கு படிப்புக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்துவெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வி மூலம் படிக்க விரும்பும் கைதிகள் சம்பந்தப்பட்டஅதிகாரிகளிடமிருந்து "ஆட்சேபணை இல்லா சான்றிதழை" பெற்று விண்ணப்பிக்கலாம்.இவர்களுக்கு படிப்புக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
அதேபோல எம்.பில். படிக்க விரும்பும் பார்வையிழந்த, உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு தகுதிமதிப்பெண்களில் 5 சதவீதம் தளர்த்தப்படும்.
மேலும் 75 சதவீத அளவுக்கு உடல் ஊனமுற்றவர்களுக்கு படிப்புக் கட்டணத்தில் சலுகைஅளிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-->