தூத்துக்குடியில் ரூ.1.3 கோடி செந்தூர மரக் கட்டைகள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

தூத்தக்குடி:

தூத்துக்குடியில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் சிங்கப்பூருக்குக்கடத்தப்பட இருந்த ரூ.1.3 கோடி மதிப்புள்ள அரிய செந்தூரம் வகையைச் சேர்ந்த மரக் கட்டைகள்பறிமுதல் செய்யப்பட்டன.

செந்தூரம் ரகத்தைச் சேர்ந்த மரங்கள் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில்தான் வளரும் தன்மைகொண்டவை. மரச் சிற்பங்கள் செய்வதற்காகவும், இசைக் கருவிகள் செய்வதற்காகவும் இவைபயன்படுத்தப்படுகின்றன.

இந்த மரங்களை வெட்டுவதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுங்கஅதிகாரிகள் தூத்துக்குடியில் உள்ள ஒரு மரக் கிட்டங்கியில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 22.94 டன்கள் எடையுள்ள செந்தூர மரக் கட்டைகள் மறைத்துவைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவற்றை சிங்கப்பூருக்குக் கடத்த சிலர்திட்டமிட்டிருந்ததாகவும் தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1.3 கோடி ஆகும்.

இதையடு"து அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக மதுரை தனி நீதிமன்றத்தில்வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நான்குமுக்கிய மர ஏஜென்சி நிறுவனங்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செந்தூர வகை மரங்கள் கடத்தப்பட்டு பிடிபடுவது இப்போதுதான் முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+