சென்னையில் வேகமாகப் பரவும் "மெட்ராஸ் ஐ"
சென்னை:
வருடாவருடம் கோடை காலத்தில் கண்களைத் தாக்கும் "மெட்ராஸ் ஐ" நோய் இந்த ஆண்டும் சென்னையில் பரவத் தொடங்கியுள்ளது.
காற்றின் மூலம் பரவும் இந்த வைரஸ் மிக வேகமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இந்த நோயைப் பரப்பும்.
தற்போது சென்னையில் வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளது. மண்டையைப் பிளக்கும் வெயில் காரணமாக நகரின் சில பகுதிகளில் இந்தநோய் பரவத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து பலரும் முன்னெச்சரிக்கையாக கறுப்புக் கண்ணாடிகளைப் போட்டுக் கொண்டு "கூலாக" வலம் வரத் தொடங்கியுள்ளனர்.
"மெட்ராஸ் ஐ" வந்தால் உடனடியாக கண் டாக்டரை அணுகி உரிய சொட்டு மருந்துகளைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்றுமாநகராட்சி சுகாதாரத் துறை பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
அவ்வப்போது வெதுவெதுப்பான நீரால் கண்களைக் கழுவ வேண்டும் என்றும், இந்த நோய் தாக்கப்பட்டவர்கள் பயன்படுத்தியதுண்டு, கைக்குட்டைகளை பிறர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications