ஸ்டாலின் மீது "கராத்தே" சராமாரி புகார்
சென்னை:
திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகர மேயராக இருந்த ஸ்டாலின் முறையான நடவடிக்கைஎடுக்காத காரணத்தால்தான் சென்னையில் குடிநீர்ப் பிரச்சினை தொடர்ந்து நிலவுவதாக துணை மேயர்"கராத்தே" தியாகராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் "கராத்தே" பேசுகையில்,
திமுக ஆட்சிக் காலத்தில் ஸ்டாலின் மேயராக இருந்தபோது மெட்ரோ வாட்டார் மற்றும்மாநகராட்சியின் கூட்டுக் கூட்டங்கள் பலமுறை நடந்துள்ளது.
ஆனால் ஒரு முறைகூட குடிநீர்ப் பிரச்சினைக்கு உருப்படியான முடிவு எடுக்கப்படவில்லை. பின்னர்இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமலும் புறக்கணித்தார் ஸ்டாலின்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.குப்பைகள் 24 மணி நேரமும் அகற்றப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுவருகின்றன.
போஸ்டர்களே இல்லாத நகரமாக சென்னையை மாற்றி வருகிறோம். கால்நடைகளைஅகற்றுவதிலும் மாநகராட்சி தீவிரமாகச் செயல்பட்டு வெற்றி பெற்று வருகிறது என்றார் "கராத்தே".
-->












Click it and Unblock the Notifications