கொடைக்கானலில் தங்கி நூல் எழுதுகிறார் கருணாநிதி
மதுரை:
திமுக தலைவர் கருணாநிதி வரும் 13ம் தேதி கொடைக்கானல் செல்கிறார். ஒரு வாரம் அங்கு தங்கி,கார்க்கி எழுதிய "தாய்" நாவலை தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபடவுள்ளார்.
சமீபத்தில் "தொல்காப்பியப் பூங்கா" என்ற விளக்க நூலை வெளியிட்டார் கருணாநிதி. அதற்காககடந்த ஆண்டு கோவா சென்று தங்கியிருந்து விளக்க உரை எழுதினார்.
"தொல்காப்பியப் பூங்கா"வின் முதல் பதிப்பு வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே இரண்டாம்பதிப்பு மதுரையில் வெளியிடப்பட்டது. வரலாறு காணாத அளவுக்கு வெளியான உடனேயேவிற்றுத் தீர்ந்ததோடு ரூ.29 லட்சம் அளவுக்கு வருவாயையும் ஈட்டித் தந்தது அந்த நூல்.
"தொல்காப்பியப் பூங்கா"வுக்குப் பின்னர் தற்போது கார்க்கி எழுதிய "தாய்" நாவலை தமிழில்மொழிபெயர்க்கும் முயற்சியில் கருணாநிதி இறங்கியுள்ளார்.
இதற்காக அவர் 13ம் தேதி கொடைக்கானல் செல்கிறார். அங்கு ஒரு வாரம் வரை தங்கியிருப்பார்.தன் மகன் மு.க. அழகிரிக்குச் சொந்தமான பங்களாவில் அவர் தங்கியிருந்து "தாய்" நாவலைஎழுதுவார்.
12ம் தேதி சென்னையிலிருந்து ரயில் மூலம் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்துக்கு செல்லும்கருணாநிதி, அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் சென்று சேருவார்.
-->