தாறுமாறாக வசைபாடாதீர்: ஜெவுக்கு இளங்கோவன் அறிவுரை
சென்னை:
அரசு விழாக்களில் எதிர்க் கட்சித் தலைவர்களை தாறுமாறாக விமர்சிப்பதை ஜெயலலிதா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாவட்டந்தோறும் அரசு விழாக்கள் என்றபெயரில், எதிர்க் கட்சித் தலைவர்கைள வசைபாடி வருகிறார்முதல்வர் ஜெயலலிதா.
மக்களுடைய வரிப் பணத்தில் நடத்தப்படும் இது போன்ற விழாக்களில் எதிர்க் கட்சித்தலைவர்களை வசைபாடுவதன் மூலம் தமிழகத்தில் ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது.
மக்கள் வரிப் பணத்தை ஆடம்பரமாகவும், வீணாகவும் செலவழித்து வருகிறீர்கள். இந்தப் பணத்தைவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கலாமே என்ற எண்ணம் கூட இந்த அரசுக்குஇல்லை.
மக்கள் சரியான நேரத்தில் அதிகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் பாடம் புகட்டுவார்கள் என்றுகூறியுள்ளார் இளங்கோவன்.
-->