For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோபி நீதிமன்றத்தில் "நக்கீரன்" கோபால் ஆஜர்

By Staff
Google Oneindia Tamil News

கோபிச்செட்டிப் பாளையம்:

சென்னை நீதிமன்றத்தின் முன் ஜாமீன் நிபந்தனைப்படி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி சசிகலா முன்பாக "நக்கீரன்" பத்திரிக்கை ஆசிரியர்கோபால் ஆஜரானார்.

அந்தியூரைச் சேர்ந்த டீக்கடைக்காரர் கந்தவேல், கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவர் பக்தவச்சலம்ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவங்களில் கோபாலும் ஒரு குற்றவாளியாகச்சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கில் சந்தனக் கடத்தல் வீரப்பன் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளான்.

முதலில் இந்த இரு வழக்குகளும் கைவிடப்படும் நிலையில் இருந்தன. ஆனால் கடந்த 2001ம்ஆண்டு நவம்பர் மாதம் கந்தவேல் கொலை வழக்கும், டிசம்பர் 3ம் தேதி பக்தவச்சலம் கொலைவழக்கும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

"நக்கீரன்" நிருபர் சிவசுப்ரமணியம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்குகளில்கோபாலின் பெயர் சேர்க்கப்பட்டது. மேலும் "நக்கீரன்" நிருபர்களான ஜீவா தங்கவேல், பாலமுருகன்,மகரன் ஆகியோரும் இந்த இரு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக கோபாலுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்சமீபத்தில் கோபாலுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் அளிக்கப்பட்டது. ஏதாவது ஒருநீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி கோபிச்செட்டிப் பாளையம் நீதிமன்றத்தில் ஆஜரானார் கோபால். அங்கு நீதிபதி சசிகலாமுன்பு ஆஜரான அவர் சொந்த ஜாமீனுக்காக ரூ.25,000 கட்டினார். மேலும் கேசவன் மற்றும் லட்சுமிநாராயணன் ஆகியோரது சொத்துக்களின் பேரிலும் அவர் நீதிபதியிடம் உத்தரவாதம் கொடுத்தார்.

மேலும், வழக்கு விசாரணை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அழைக்கும் நேரத்தில் ஆஜராகதயார் நிலையில் உள்ளதாகவும் உறுதி அளித்தார் கோபால்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X