For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊரை ஏமாற்றும் வாஜ்பாய், அத்வானி: ஜெயந்தி நடராஜன் கடும் தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் மசோதை நிறைவேற்றாமல் பிரதமர் வாஜ்பாயும், துணைப்பிரதமர் அத்வானியும் எல்லோரையும் ஏமாற்றி வருவதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெயந்திநடராஜன் குற்றம் சாட்டினார்.

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. இதற்கு முலாயம் சிங்யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று கூறிவருகிறது.

இரு தினங்களுக்கு முன் வாஜ்பாய் தலைமையில் இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.அப்போதும் அனைத்துக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதற்கு மத்திய அரசின் மெத்தனம்தான் காரணம் என ஜெயந்தி நடராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று சென்னையில் மகளிர் மசோதா நிறைவேறாததைத் கண்டித்து ஆர்பாட்டம் நடந்தது. இதற்குத் தலைமைவகித்த ஜெயந்தி பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,

பொடா சட்டத்துக்குக் கூடத் தான் அனைத்துக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஆனால், அதைமட்டும் மத்திய அரசு நிறைவேற்றியது எப்படி? பொடா சட்டததைக் கொண்டுவர மத்திய அரசும், பிரதமரும்,துணைப்பிரதமர் அத்வானியும் படாதபாடு பட்டார்கள். நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி சட்டத்தைநிறைவேற்றினார்கள்.

ஆனால், அவர்களுக்கு மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டத்தைக் கொண்டு வர மட்டும்தெரியவில்லையாம். இந்தச் சட்டத்தைக் கொண்டு வரும் அக்கறை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்குவேண்டிய சட்டத்தை மட்டும் கொண்டு வரத் தெரிகிறது. இதைக் கொண்டு வரத் தெரியவில்லையோ?

இப்போது மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆதரவு தந்த பின்னரும் கூடஅதை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாயும் துணைப் பிரதமர் அத்வானியும் இந்தவிஷயத்தில் ஊரை ஏமாற்றி வருகின்றனர் என்றார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X