திமுக கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்: சென்னை மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தின்போது துணை மேயர் "கராத்தே" தியாகராஜனால் வெளியேற்றப்பட்ட திமுககவுன்சிலர்கள் மாநகராட்சி வளாகத்திலேயே அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது மதிமுகஉறுப்பினரான அம்பிகாபதி குறுக்கிட்டு ஒரு விஷயம் தொடர்பாக பேச முயன்றார்.
ஆனால் அவருக்கு "கராத்தே" அவருக்கு அனுமதி மறுத்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்தனர். உறுப்பினர்கள் பேசும்போது துணை மேயர் குறுக்கிடக் கூடாது என்றும் அவர்கள் கோஷம்போட்டனர்.
இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் கடும் ஆட்சேவம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு கூச்சல், குழப்பம்ஏற்பட்டது. யார் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை.
இந்நிலையில் முன்னாள் மேயர் ஸ்டாலின் குறித்து "கராத்தே" ஏதோ கூற, அதை சில திமுக உறுப்பினர்கள்கடுமையாக எதிர்த்தனர். உடனே அவர்களை அவையை விட்டு வெளியேற்றுமாறு கராத்தே தியாகராஜன்உத்தரவிட்டார்.
ஆனால் இதை மற்றொரு திமுக கவுன்சிலரான ராஜேந்திர பாபு கடுமையாக எதிர்க்கவே அவரையும் வெளியேற்றதுணை மேயர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மூன்று திமுக கவுன்சிலர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்துஅவையில் இருந்த மற்ற திமுக உறுப்பினர்களும் இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் மாநகராட்சி வளாகத்தில் கூடிய அனைத்து திமுக கவுன்சிலர்களும் அங்கேயே அமர்ந்து "கராத்தே"யைக்கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை மாநகராட்சி வளாகத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
-->