ஜெ. விழாக்களுக்கு தடை கோரி வழக்கு: இளங்கோவன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாவட்டந்தோறும் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஆடம்பர அரசு விழாக்களுக்குத் தடைவிதிக்கக் கோரி வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன்கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வளர்ச்சித் திட்டப் பணிகளைத் துவக்கிவைப்பதாகக் கூறி மாவட்டந்தோறும் தனி விமானத்தில் ஜெயலலிதா பறந்து கொண்டிருக்கிறார்.

அங்கு போய் மக்கள் நலத் திட்டங்கள் குறித்துப் பேசுவதை விட்டுவிட்டு எதிர்க் கட்சித் தலைவர்கள்குறித்து அவதூறாகப் பேசி வருகிறார்.

ஜெயலலிதாவின் இந்த நிகழ்ச்சிகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். இந்த ஆடம்பரவிழாக்களுக்கு ஆகும் செலவை வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கும் இழப்பீடாகக் கொடுத்து உதவலாம்.

யாருக்கும் பிரயோஜனப்படாத வகையில், செலவு செய்து நடத்தப்படும் இந்த விழாக்களுக்குத் தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது குறித்து காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது.

சாத்தான்குளத்தில் அதிமுகவின் பணபலம், படை பலத்தையும் மீறி காங்கிரஸ் கட்சிக்கு கணிசமானமக்கள் வாக்களித்துள்ளனர். இதுகுறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தி மிகுந்தமகிழ்ச்சியடைந்துள்ளார்.

பா.ஜ.க. அரசை எதிர்த்து செயல்பட திமுக முன் வந்தால் அதை காங்கிரஸ் ஆதரிக்கும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+