For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அயோத்தி விவகாரம்: மனித உரிமை ஆர்வலர் திடீர் கைது

By Staff
Google Oneindia Tamil News

அயோத்தி:

அயோத்தி விவகாரத்தை சங் பரிவார் அமைப்பு அரசியலாக்குவதாகக் கூறி அங்கு தர்ணாபோராட்டம் நடத்திய பிரபல மனித உரிமை ஆர்வலரான சந்தீப் பாண்டே கைது செய்யப்பட்டார்.

"மகசேசே விருது" பெற்றுள்ள பாண்டே அயோத்தியில் உள்ள துளசி செளரா கோவில் முன்பாககடந்த ஒரு வாரமாகத் தன் ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை தர்ணாவில் ஈடுபட்டிருந்த பாண்டே உள்ளிட்ட மூன்று பேரைப்போலீசார் கைது செய்தனர்.

ஈராக் மீது போர் தொடுக்க முயற்சித்து வரும் அமெரிக்காவைக் கண்டித்தும் அவர்கள்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இன்று மீண்டும் அகழ்வாராய்ச்சிப் பணிகள்மேற்கொள்ளப்பட்டன.

இன்று நிலத்தைத் தோண்டியபோது 1934ம் ஆண்டைச் சேர்ந்த மூன்று அடுப்புகளும், பழையசாலையின் ஒரு பகுதியும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதற்கிடையே வக்பு வாரியத்தின் ஆட்சேபணையைத் தொடர்ந்து நிலத்தைத் தோண்டும் பணியில்சில முஸ்லீம் தொழிலாளர்களும் இன்று ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் வெறும் "அரசியல் நாடகம்" என்று கூறி வந்த வக்புவாரியத்தின் தலைவரான முகமது ஹாசிம் அன்சாரியும் இன்று நிலம் தோண்டப்பட்ட போது வந்துபார்வையிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X