காளிமுத்துவின் உதவியாளருக்கு கத்திக் குத்து
சென்னை:
சபாநாயகர் காளிமுத்துவின் உதவியாளர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்தார்.சபாநாயகரின் வீட்டு வாசலிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றது.
காளிமுத்துவின் உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் ஜெயப்பிரகாஷ். இவர் மதுரை மாவட்டம்திருமங்கலத்தை அடுத்துள்ள சவரப்பேட்டையைச் சேர்ந்தவர்.
இதே ஊரைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவருக்கும் ஜெயப்பிரகாஷுக்கும் இடையே கொடுக்கல்,வாங்கல் பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னை-ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காளிமுத்துவின் வீட்டிலிருந்து இன்றுகாலை ஜெயப்பிரகாஷ் வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது அருகில் மறைவிடத்தில்பதுங்கி இருந்த பாண்டியராஜன் திடீரென்று அவர் மீது பாய்ந்தார்.
பின்னர் ஜெயப்பிரகாஷின் வயிற்றில் கத்தியால் சராமாரியாகக் குத்தினார் பாண்டியராஜன்.இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த ஜெயப்பிரகாஷ் உடனடியாகசென்னை-ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கத்தியால் குத்தி விட்டுத் தப்பி ஓட முயன்ற பாண்டியராஜனை காளிமுத்துவின் வீட்டில்காவலுக்கு நின்றிருந்த போலீசார் விரட்டிப் பிடித்தனர். பின்னர் அவர் அருகில் உள்ள அபிராமபுரம்போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக பாண்டியராஜனிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications