ஜெயாவை தரக் குறைவாக பேசிய வழக்கு: மதுரை நீதிமன்றத்தில் இளங்கோவன் ஆஜர்
மதுரை:
முதல்வர் ஜெயலலிதாவை தரக் குறைவாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் இளங்கோவன் இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மதுரையை அடுத்த உத்தமபாளையத்தில் சமீபத்தில் நடைபெற்ற பேரூராட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போதுஜெயலலிதாவை இளங்கோவன் மிகவும் தரக் குறைவாகப் பேசியதாகத் தெரிகிறது.
இதையடுத்து அவர் மீது அரசு வழக்கறிஞர் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பானவிசாரணை இன்று நடந்தபோது இளங்கோவன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
"ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசி இருக்கிறேன் என்றால் அவர்தான் என் மீது வழக்கு தொடர்ந்திருக்கவேண்டும். அரசு வழக்கறிஞர் வழக்குத் தொடர முடியாது. எனவே, அவர் தொடர்ந்த இந்த வழக்கைத் தள்ளுபடிசெய்ய வேண்டும்" என்று கூறி இளங்கோவன் ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ஆனால் நீதிபதி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார். பின்னர் இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது.விசாரணையின் முடிவில் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 21ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதன் பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த இளங்கோவன் நிருபர்களிடம் கூறுகையில்,
லஞ்சம் வாங்கியது தொடர்பாகவோ, வருமான வரி கட்டவில்லை என்றோ என் மீது இந்த தமிழக அரசால் வழக்குதொடர முடியாது.
அதனால் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடுதான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் பயந்துபோய் நான் அடங்கி விட மாட்டேன். ஜெயலலிதாவின் தவறுகளை இன்னும் அதிகமாக நான் சுட்டிக் காட்டுவேன்.
இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில் வந்து ஆஜராக வேண்டும். அவரிடம் நான் குறுக்கு விசாரணை நடத்துவேன்என்றார் இளங்கோவன்.
-->