மதுரை வருகிறார் நேபாள மன்னர்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
நேபாள மன்னர் ஞானேந்திரா மற்றும் அவரது மனைவி ஆகியோர் 3 நாள் பயணமாக 24ம் தேதிமதுரை வருகிறார்கள்.
சிறப்பு விமானம் மூலம் இருவரும் மதுரைக்கு வரும் அவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலில்நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.
இதன் பின்னர் மன்னரும் ராணியும் ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமி கோவிலில் சாமிகும்பிடுகிறார்கள். இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் கடலில் புனித நீராடுகிறார்கள்.
நேபாள மன்னரும் ராணியும் மதுரை வருவதையொட்டி சென்னையிலிருந்து தனிப் போலீஸ் படைஒன்று மதுரை வந்துள்ளது.
இவர்கள் நேபாள மன்னர் செல்லவிருக்கும் இடங்களை நேரில் பார்வையிட்டு பாதுகாப்புஏற்பாடுகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications