For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைதிப் பேச்சு: யாழ்ப்பாண தமிழர்களுக்கு மறுவாழ்வு

By Staff
Google Oneindia Tamil News

ஹொகேன்:

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 6ம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இன்று 2ம் நாளாகஜப்பானில் நடைபெற்றன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹொகேன் நகரில் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள்நடைபெறுகின்றன. நாளை மறுநாள் வரை இந்தப் பேச்சுக்கள் நீடிக்கும்.

கடந்த வாரம் யாழ்ப்பாணக் கடலில் புலிகளின் சரக்குக் கப்பலை இலங்கை கடற்படை மூழ்கடித்த சம்பவம் குறித்துநேற்றைய பேச்சுக்களின்போது விவாதிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நேராமல் பார்த்துக் கொள்வது என்றும் நேற்றுமுடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக அமைதிப் பேச்சுக்கள் தொடர்ந்தன. இன்றையபேச்சுவார்த்தையின்போது யாழ்ப்பாணத் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் வட, கிழக்கு இலங்கையில் உள்ள உயர் பாதுகாப்புப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவப் படைகளைஅரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று புலிகள் வலியுறுத்தினர்.

ஆனால் அரசுத் தரப்பினர் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டனர். இப்போதைக்கு அங்குள்ளராணுவத்தினரை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.

இதற்கிடையே புலிகள் தங்கள் இயக்கத்தில் சிறார்களைத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டு வருவதாக"பல்கலைக்கழக ஆசிரியர்கள் மனித உரிமை" அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

வட, கிழக்கு இலங்கையில் உள்ள ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் உள்ள ஒரு சிறுவன் அல்லது சிறுமி தங்கள்இயக்கத்தில் சேர வேண்டும் என்று புலிகள் இயக்கம் வற்புறுத்தி வருவதாகவும் அந்த மனித உரிமை அமைப்புபுகார் கூறியுள்ளது.

இதன் மூலம் ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு வழங்கியுள்ள உறுதிமொழிகளை புலிகள் மீறியுள்ளனர்என்றும் குற்றம் சாட்டியுள்ளது இந்த மனித உரிமை அமைப்பு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X