For Daily Alerts
Just In
இதுவரை 40 லட்சம் பேருக்கு அன்னதானம்: அமைச்சர் தகவல்
ஈரோடு:
தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தின் மூலம் இதுவரை40 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.சி. ராமசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 144 கோவில்களில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அன்றிலிருந்து இதுவரை 40 லட்சம் பேர் வரை இந்தத் திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.
பெருந்தலைவர் காமராஜர், அவருக்குப் பிறகு எம்.ஜி.ஆர். ஆகியோர் ஏழைக் குழந்தைகள் பசியாறும் வகையில்கொண்டு வந்த சத்துணவுத் திட்டம் போலவே இந்த அன்னதானத் திட்டம் ஏழை மக்களைக் கருத்தில் கொண்டுகொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் ராமசாமி.
-->
Comments
Story first published: Wednesday, March 19, 2003, 5:30 [IST]