For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

12 மணி நேரத்தில் தரைப்படை நுழையும்?

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

ஈராக்கின் மீது அதிகாலை 6.30 மணிக்கு (வாஷிங்டனில் இரவு 10.30 மணி) தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களில் அமெரிக்க அதிபர்ஜார்ஜ் புஷ் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.

அவர் கூறியதாவது:

ஈராக்கின் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது. அந் நாட்டில் உள்ள பேரழிவு ஆயுதங்கள் ஒழிக்கப்படும். சதாம் ஹூசேனையும் ஒழித்துக்கட்டி அந் நாட்டு மக்களை விடுவிப்போம்.

போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்களின் குடும்பங்களின் கவலை எனக்குப் புரிகிறது. ஆனால், செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில்நடந்தது போன்ற தாக்குதல்களை தடுக்கவே இந்தப் போர் நடக்கிறது. இது தீவிரவாதத்துக்கு எதிரான போர்.

போரை விரைவாக முடிக்க வேண்டும். அதற்காக பெரிய தாக்குதலை நடத்தினால் தான் முடியும். ஆனால், சதாம் ஹூசேன் தனதுபடைகளை மக்கள் நிறைந்த பகுதிகளில் நிறுத்தியுள்ளார். அமெரிக்கத் தாக்குதலில் இருந்து தனது படைகளைக் காப்பாற்ற பெண்கள்,குழந்தைகளை மனித கேடயங்களாக நிறுத்தியுள்ளார்.

12 மணி நேரத்தில் படைகள் நுழையும்:

இதற்கிடையே அமெரிக்கத் தரைப்படைகள் அடுத்த 12 மணி நேரத்தில் (இன்று இரவு) ஈராக்குக்குள் நுழையும் என பென்டகன்கூறியுள்ளது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X