இந்திய போர் பயிற்சி விமானம் வெற்றிகரமாய் பறந்தது
பெஙகளூர்:
இந்தியாவே தயாரித்துள்ள போர்ப் பயிற்சி விமானம் (Intermediate Jet Trainer -IJT)இன்று மீண்டும் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.
பெங்களூரில் பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் விமான தளத்தில் இருந்து இந்த விமானம்வெற்றிகரமாகப் பறந்தது.
இந்த விமானத்தின் சோதனையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், விமானப் படைத் தலைவர் கிருஷ்ணசாமிஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
மேலும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் ஆத்ரே, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத் தலைவர் மொகந்தி ஆகியோரும்இதனை பார்வையிட்டனர்.
இந்திய விமானப் படையின் விமானியான ஸ்குவாட்ரன் லீடர் பல்வேத் சிங் இந்த விமானத்தை இயக்கினார். காலை 10.03 மணிக்குடேக்-ஆப் ஆன விமானம் 10.30 மணிவரை வெற்றிகரமாக பல வானில் பல சாகஸங்களைச் செய்துவிட்டு பத்திரமாக தரையிறங்கியது.
விமானப் படையின் ஆரம்பப் பயிற்சிகாக இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போது கிரண் ரக பயிற்சி விமானங்களில் தான்விமானிகளுக்கு பயிற்சி தரப்படுகிறது. இனிமேல் இந்த விமானங்கள் தான் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும்.
இந்த விமானம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முதலாக கடந்த 7ம் தேதி இந்தவிமானம் விண்ணில் பறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.