For Daily Alerts
Just In
"நக்கீரன்" நிருபரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
கோயம்புத்தூரைச் சேர்ந்த "நக்கீரன்" நிருபர் மகரன் என்ற கிருஷ்ணகுமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன்மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
கடந்த 1998ம் ஆண்டு கோயம்புத்தூரில் பக்தவச்சலம் என்பவர் வீரப்பனால் கொலை செய்யப்பட்ட வழக்கில்மகரனும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட அவர் தன்னை ஜாமீனில் விடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், மகரனின் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்தார்.
மகரன் தற்போது கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-->
Comments
Story first published: Friday, March 21, 2003, 5:30 [IST]