மே 14 வரை பட்ஜெட் கூட்டத் தொடர்
சென்னை:
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் மே 14ம் தேதி வரை நடைபெறும் என்றுசபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு நடந்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம்காளிமுத்து பேசுகையில்,
பட்ஜெட் மீதான விவாதம் நாளை மறுநாள் தொடங்கி ஒரு வாரத்திற்கு நடைபெறும். ஏப்ரல் 1ம்தேதி விவாதத்திற்குப் பதிலளித்து நிதி அமைச்சர் பொன்னையன் பேசுவார்.
அதன் பிறகு பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படும்.
ஏப்ரல் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி சட்டசபைக் கூட்டம்நடைபெறாது. அதேபோல மே 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்ககளும் விடுமுறை தினங்களாகும்.
சட்டசபைக் கூட்டங்கள் காலையில் நடக்கும். தேவைப்பட்டால் சில நாட்களுக்கு மட்டும்மாலையிலும் கூட்டம் நடைபெறும்.
இதுவரை தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ் உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டிருந்த குமாரதாஸ்,ஹக்கீம், ஈஸ்வரன் ஆகியோர் இனிமேல் அதிமுக உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்படுவர். தாங்கள்அதிமுகவில் சேர்ந்து விட்டதாகத் தனித்தனியே அவர்கள் எனக்குக் கடிதம் கொடுத்துள்ளனர்.
அதே போல, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னத்தில் நின்று போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்தியக் குடியரசுக் கட்சியின் செ.கு. தமிழரசன் எந்தக் கட்சியையும் சாரதாவர் என்றுகருதப்படுவார்.
-->