அனைத்து கட்சி கூட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாஜ்பாய் மறுப்பு
டெல்லி:
ஈராக் போர் குறித்தும், இந்த விவகாரத்தில் இந்தியா எடுக்க வேண்டிய நிலை குறித்தும் பேச இன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டினார். ஆனால், இதில் அமெரிக்காவைக் கண்டித்துத் தீர்மானம் போடவாஜ்பாய் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் எதிர்க் கட்சிகள் கோபத்துடன் வெளியேறின.
முன்னதாக கடந்த 10ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஈராக் போர் விவகாரம் குறித்து வாஜ்பாய்விளக்கினார். ஆனால், இதில் இந்தியாவின் நிலை என்ன, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுடன் தான் பேசியதுஎன்ன போன்ற விளக்கங்களைத் தர வாஜ்பாய் மறுத்தார்.
இதனால் அமெரிக்க நெருக்குதலுக்கு இந்தியா அடிபணிந்துவிட்டதாகவும், புஷ்சுக்கு வாஜ்பாய் முழு ஆதரவுதெரிவித்துள்ளதாகவும் எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து இன்று மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை வாஜ்பாய் கூட்டினார். காலை 11 மணிக்குநாடாளுமன்ற வளாகத்தில் இக் கூட்டம் நடந்தது.
இதில் பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, வெளியிறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா,பாதுகாப்புத்துறை அமைத்தர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக, சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் உள்படஅனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதில் இந்தியாவின் நிலை குறித்து எதிர்க் கட்சிகளிடம் வாஜ்பாய் விளக்கினார். போரை இந்தியா ஆதரிக்கவில்லைஎன்றும், அமெரிக்காவுக்கு போர் விஷயத்தில் எந்த ஆதரவும் தரப்பட மாட்டாது என்றும் கூறினார்.
ஆனால், வாஜ்பாயின் இந்தப் பேச்சை எதிர்க் கட்சிகள் ஏற்கவில்லை. அமெரிக்காவுக்கு ஏதோ ஒருஉறுதிமொழியைக் கொடுத்துவிட்டு அதை மத்திய அரசு மறைப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து அமெரிக்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றலாம் என எதிர்க் கட்சிகள் கூறின. ஆனால், அந்தத்தீர்மானத்தில் அமெரிக்காவை கண்டிக்கும் வாசகங்கள் இருக்கக் கூடாது என வாஜ்பாய் கூறினார். இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதையடுத்து அந்கக் கூட்டம் அரைகுறையாக முடிவடைந்தது. எதிர்க்கட்சியினர் அரசைக் கண்டித்துவிட்டுவெளியேறின.
-->












Click it and Unblock the Notifications