ஏப்ரல் 8ம் தேதி விண்ணில் பாய்கிறது இன்சாட்-3ஏ
பெங்களூர்:
இந்தியாவின் புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான இன்சாட்-3ஏ வரும் ஏப்ரல் 8ம் தேதிவிண்ணில் செலுத்தப்படுகிறது.
தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூ விண் தளத்திலிருந்து இன்சாட்-3ஏஏவப்பட உள்ளது.
ஐரோப்பிய ராக்கெட்டான ஏரியன்-5 இந்த செயற்கைக் கோளை விண்ணுக்கு சுமந்து செல்கிறது.
கடந்த பிப்ரவரி மாதமே விண்ணில் ஏவப்பட்டிருக்க வேண்டிய இன்சாட்-3ஏ சுமார் இரண்டு மாதகால தாமதத்திற்குப் பின்னர் ஏப்ரல் 8ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
ஓரிரு நாட்கள் முன்பாகவோ அல்லது தாமதமாகவோ இந்தச் செயற்கைக்கோள் செலுத்தப்படலாம்என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான "இஸ்ரோ"வைச் சேர்ந்த அதிகாரிகள் இன்றுதெரிவித்துள்ளனர்.
இன்சாட்-3ஏ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய பின்னர் இன்சாட்-3ஈ தகவல் தொடர்புசெயற்கைக்கோளும் தயாராகி விடும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் அது விண்ணில் ஏவப்படும்என்றும் "இஸ்ரோ" அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கு முன்பாகவே ஜி.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் மூலம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்துஜிசாட்-2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவும் "இஸ்ரோ" விஞ்ஞானிகள்திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications