போர் முனையில் 3 இங்கிலாந்து நிருபர்கள் பலி
துபாய்:
ஈராக்கில் போர் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற 3 பிரிட்டிஷ் நிருபர்களும் ஒரு ஆஸ்திரேலிய நிருபரும்குண்டுவீச்சு மற்றும் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தனர்.
பாஸ்ரா நகர் அருகே பிரிட்டன்- ஈராக் படைகளிடையே நடந்து வரும் மோதலை படம் எடுத்துக் கொண்டிருந்தபிரிட்டனின் ஐ.டி.என். டிவி நிருபர்கள் ஈராக்கிய குண்டு வீச்சிலும் துப்பாக்கித் தாக்குதலிலும் பலியாயினர்.
பலியானவர்களில் டெர்ரி லாய்ட் என்பவர் நிருபராவார். பிரட் நெராக் கேமராமேன் ஆவார். ஹூசேன் ஒத்மேன்மொழிபெயர்ப்பு நிருபராவார்.
இவர்களுடன் இருந்த இன்னொரு நிருபரான டேனியெல் டிமோஸ்டர் படுகாயத்துடன் தப்பிவிட்டார்.
அதே போல வடக்கு ஈராக்கில் செக்போஸ்ட் அருகே அல் கொய்தாவுடன் தொடர்புடையேஅன்ஸர்-அல்-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் ஒரு ஆஸ்திரேலியநிருபர் பலியானார்.
ஈராக் தூதர்கள்- நாடுகள் ஆதரவு:
ஈராக் தூதர்களை வெளியேற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் உத்தரவை ஏற்க முடியாது என எகிப்து,லெபனான், ஈரான் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. ஏற்கனவே, ரஷ்யாவும் அதே முடிவை அறிவித்தது.
-->












Click it and Unblock the Notifications