ஜூன் 23ம் தேதி முதல் பி.ஈ., எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்
சென்னை:
என்ஜினியரிங் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கானகவுன்சலிங் வரும் ஜூன் 23ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இந்தக் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 12 மற்றும் 13ம் தேதிகளில்நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து இதற்கான மதிப்பெண் பட்டியல் ஜூன் 15ம் தேதி வெளியிடப்படும்.
பின்னர் ஜூன் 23ம் தேதி முதல் என்ஜினியரிங் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும்மாணவ, மாணவிகளுக்கான கவுன்சலிங் நடைபெறும்.
சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் கவுன்சலிங் நடைபெறும். மேலும் காரைக்குடிஅல்லது திருநெல்வேலி ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்திலும் கவுன்சலிங் நடத்த ஏற்பாடுசெய்யப்படும்.
கவுன்சலிங் முடிந்த பின்னர் ஆகஸ்ட் 4ம் தேதி என்ஜினியரிங் கல்லூரி வகுப்புகள் தொடங்கும்என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-->