சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்: ஜெ.
சென்னை:
தமிழகத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கும் குடிசைவாழ் மக்களுக்கும் இலவச மின்சாரத்திட்டம் தொடரும் என்றும் ஆனால் வசதி படைத்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம்ரத்து செய்யப்பட்டதைத் திரும்பப் பெற முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாகத்தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்க் கட்சிகளும், விவசாயஅமைப்புகளும் கடுமையாகக் கண்டித்துள்ளன. பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இன்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது குறுக்கிட்டு ஜெயலலிதாபேசுகையில்,
தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும், குடிசைவாழ் மக்களுக்கும் இலவசமின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
மின்சார வாரியத்திற்கு இதுவரை அளித்து வந்த மானியத்தைத் தொடர உலக வங்கி மறுத்துவிட்டதைத் தொடர்ந்து, சிறு மற்றும் குறு விவசாயிகள் நன்மைக்காக நேரடியாகவே தமிழக அரசுநிதியை ஒதுக்கியுள்ளது.
ஆனால் வசதி படைத்த விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தைத் தொடர முடியாதசூழ்நிலையில் அரசு உள்ளது. மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும் விவசாயிகளுக்கான மின்கட்டணங்கள் மற்ற மாநிலங்களை விடக் குறைவாகத்தான் உள்ளன.
தமிழக வறட்சி நிவாரண நிதியாக சுமார் ரூ.2,067 கோடி மத்திய அரசிடம் கேட்டிருந்தோம். ஆனால்வெறும் ரூ.258 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறதுஎன்றார் ஜெயலலிதா.
-->












Click it and Unblock the Notifications