திண்டுக்கல்: மரத்தில் கார் மோதி பெண், 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
விழுப்புரத்தைச் சேர்ந்த துணி வியாபாரி ஒருவரின் கார் திண்டுக்கல் அருகே விபத்தில் சிக்கியதில்காரில் பயணம் செய்த பெண் உள்பட 4 பேர் பலியாயினர்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் துணி வியாபாரி ஸ்ரீதர் தன் குடும்பத்தினருடன் காரில் பழனிக்குச்சென்றார்.
பழனி முருகன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் விழுப்புரம் திரும்பிக் கொண்டிருந்தனர்.திண்டுக்கல் அருகே வந்தபோது ராஜக்காபட்டி பாலம் அருகே சாலையோரம் இருந்த மரத்தின் மீதுகார் பயங்கரமாக மோதியது.
இதில் காரில் இருந்த ஸ்ரீதர், அவருடைய தந்தை ரங்கசாமி, உறவினர் செந்தில் ஆகியோர் சம்பவஇடத்திலேயே இறந்தனர்.
படுகாயமடைந்த ஸ்ரீதரின் மனைவி சுப்புலட்சமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைபலனளிக்காமல் உயிரிழந்தார்.
இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications