For Daily Alerts
Just In
பஸ் மோதி பெண் சாவு: அமெரிக்க தூதரக ஊழியர்
சென்னை:
அமெரிக்க துணைத் தூதரக அலுவலகத்தில் பணியாற்றி வந்த இளம் பெண் சென்னையில் அரசு பஸ்மோதி பரிதாபமாக பலியானார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர்கள் அபர்ணா, உத்ரா. இருவரும் அண்ணாசாலையில் உள்ளஅமெரிக்க துணைத் தூதரக அலுவலகத்தில் பணியாற்றி வந்தனர்.
இருவரும் தங்களது மொபெட்டில் அலுவலகத்திற்குக் கிளம்பினர். அப்போது வேகமாக வந்த அரசுபஸ் இவர்களது மொபட் மீது மோதியது.
இதில் அபர்ணா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அவருக்குசமீபத்தில்தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்தில் படுகாயம் அடைந்த உத்ரா உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->
Comments
Story first published: Wednesday, March 5, 2003, 5:30 [IST]