மே 5 முதல் ஸ்டிரைக்: அரசு ஊழியர்கள் மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு ஊழியர்களுக்கு அவர்களது சலுகைகள் அனைத்தையும் வரும் 31ம் தேதிக்குள் திரும்பவழங்காவிட்டால் மே 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகதமிழக அரசு ஊழியர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஒன்றியத்தின் தலைவர் சூரியமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில்,

சரண் விடுப்பு, போனஸ் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் அரசு தற்போது நிறுத்திவைத்துள்ளது. இவற்றை மார்ச் 31ம் தேதிக்குள் மீண்டும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மூன்றுகட்டமாகப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

முதல் கட்டமாக ஏப்ரல் 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் இருப்போம். பின்னர்10ம் தேதி முதல் 22ம் தேதி வரை அனைத்து அரசு அலுவலகங்களின் முன்பாகவும் வாயில்கூட்டங்கள் நடத்தப்படும்.

இறுதிக் கட்டமாக மே 5ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார்சூரியமூர்த்தி.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழகம் முழுவதிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். அப்போது சூரியமூர்த்திதலைமையிலான ஒன்றியம் திடீரென்று போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் வாபஸ் பெற்றது.இவர்களது ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அந்த வேலைநிறுத்தம் பிசுபிசுத்தது.

இந்நிலையில் சூரியமூர்த்தி தலைமையிலான ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்தப்போராட்டத்திற்கு மற்ற அரசு ஊழியர் சங்கங்கள் எந்த அளவுக்கு ஆதரவு தரும் என்றுதெரியவில்லை. அந்த சங்கங்கள் சூரியமூர்த்தியின் அழைப்பை நிராகரிக்கும் என்றேஎதிர்பார்க்கப்படுகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+