குவைத்தில் முழு அமைதி: இந்திய அதிகாரி தகவல்
டெல்லி:
குவைத்தில் நிலைமை மிக அமைதியாக இருப்பதாகவும் குவைத்- இந்தியாவுக்கு இடையிலான விமானக் கட்டணம் குறைக்கப்படும்என்றும் இந்திய விமானத்துறைச் செயலாளர் ராய்பால் கூறினார்.
குவைத் சென்று திரும்பிய அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், ஈராக் போர் காரணமாக குவைத்தில் எந்தவிதமான பதற்றமும்இல்லை. இந்தியர்கள் உள்பட அனைத்து மக்களும் எந்தவித அச்சத்திலும் இல்லை.
இதனால் குவைத்தில் இருந்து இந்தியா திரும்ப பெரும்பாலான இந்தியர்கள் ஆர்வம் காட்டவில்லை. போர் ஆரம்பித்தவுடன் இந்தியாவுக்குவர அதிகம் போர் ஆர்வம் காட்டியதால் கூடுதல் விமானங்களை இயக்கினோம். இந்த விமானங்கள் இந்தியாவில் இருந்து குவைத்துக்குகாலியாக சென்றன.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட குவைத்- இந்தியா விமானக் கட்டணங்களை ரூ. 3,000 வரை உயர்த்தினோம்.
ஆனால், இப்போது யாரும் இந்தியாவுக்கு வர அவசரம் காட்டவில்லை. பல பேர் வாங்கிய டிக்கெட்டுகளைக் கூட கேன்சல் செய்யஆரம்பித்துவிட்டனர். இதனால் கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டிய அவசியமும் எழவில்லை இதன் காரணமாக கட்டணம் மீண்டும்குறைக்கப்படும். குவைத் ஏர்வேசின் கட்டணத்தைப் பொறுத்து நமது கட்டணமும் குறைக்கப்படும் என்றார் ராய் பால்.
விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷானவாஸ் ஹூசேன் கூறுகையில், தேவைப்பட்டால் குவைத்துக்கு இயக்க 11 விமானங்கள்தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.
-->












Click it and Unblock the Notifications