செக்ஸ் சாமியார் பிரேமானந்தா உச்ச நீதிமன்றத்தில் "அப்பீல்"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருச்சி செக்ஸ் சாமியார் பிரேமானந்தா தனக்கு விதிக்கப்பட்டுள்ள இரட்டை ஆயுள் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

திருச்சி அருகே பாத்திமா நகர் பகுதியில் ஆசிரமம் அமைத்து நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த பிரேமானந்தாசாமியார், ஆசிரமத்தில் இருந்த 13 பெண்களை கற்பழித்ததும் ரவி என்பவரைக் கொன்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரேமானந்தா கைது செய்யப்பட்டார். அவர் மீதுபுதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிரேமானந்தவுக்காக முன்னாள் மத்திய அமைச்சரும்,பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானியே வந்து வாதாடினார்.

இந்த வழக்கில் கடந்த 1994ம் ஆண்டு நீதிபதி பானுமதி தீர்ப்பு வழங்கினார். பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனையும் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரேமானந்தா மேல் முறையீடுசெய்தார். ஆனால் அங்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அபராதத் தொகை மட்டும் சிறிது குறைக்கப்பட்டது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை தற்போது அணுகியுள்ளார் பிரேமானந்தா.அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,

தகுந்த ஆதாரத்துடன் தனது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. சந்தர்ப்ப, சாட்சியங்களை வைத்தே தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது.

எனவே எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார் பிரேமானந்தா.

ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+